விட்டிடு கொடுமை!

விட்டிடு கொடுமை!

ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;

ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.

யாரைக் காக்க இவரைக் கொன்றார்?

இல்லை நற்பதில், தராது சென்றார்.

போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர். 

புரிதல்  பெற்று, இணையப் பாரீர்.

நீரை வடிக்கும்  குடும்பமும் பாரீர்.

நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!

-கெர்சோம் செல்லையா. 

வந்தவர் எத்தனை பேரென அறியோம்;

வணங்கி, பொற்பொருள் தருகிறார்.

தந்தவர் அரண்மனை செல்லாவண்ணம்,

தடுக்கப்பட்டு, விடை பெறுகிறார்.

முந்தையர் கொடுத்த பரிசுகள் போன்று,

முழுமையாக நமைத் தருவோம்.

இந்தப் படைப்பின் விளைச்சல் பெருகும்;

இனிய புதுவழிப் பேறுறுவோம்!

(மத்தேயு 2)

May be an image of 2 people

பிறந்த செய்தி முதலில் கேட்டார்,

பிறரால் ஒடுக்கப் பட்டவரே.

திறந்த வெளியில் மந்தை காக்கும்,

தீட்டுத் தொழிலால் கெட்டவரே!

உறைந்த மடமை உள்ளில் கொண்டார்,

உண்மையின்றித் தீட்டென்பார்.

நிறைந்த அறிவால் நமை நடத்தும்,

நேரிறையோ நற் கூட்டென்பார்!

(லூக்கா 2: 8-12).

May be an image of lamb, sheep and text

நம்மை  விடவும் நான்கு கற்றார்,

நன்றாய் ஆய்ந்து அறியினும்,

தம்மை மீட்பார் தன்மை அறியார்;

தவறி அரண்மனை போகிறார்.

செம்மை அறிவு பிறகு பெற்றார் 

செல்ல வாக்கு உரைப்பரும்,

பொம்மை போல போகாதிருந்தார்;

புறக்கணிப்பால் நோகிறார்!

(மத்தேயு 2)

ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் நிறைவை யார்தான் விடுவார்?

வையம் இறங்கும் ஏதென்ன?

நான் என்கிறத் தீமை கொள்ளும்,

நாட்டவர் மீள வழியென்ன? 

தான் இறங்கித் தாழ்மை சொன்னார்;

தவறா இறை மொழியென்ன?

(யோவான் 3:16}.

2025

2025 -ஆம் ஆண்டு வாழ்த்து!

தோண்டும் மனிதர் தொடர்ந்தாலும்,

தொடக்க நாளை அடையவில்லை.

ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும்,

ஆண்டவராண்டோ முடியவில்லை.

மாண்டவர் எச்சமே தூக்கினோம்;

மனித அறிவில் விடியலில்லை.

வேண்டியே இறையை நோக்குவோம்;

விண்வாழ்வுறத் தடையுமில்லை!

-கெர்சோம் செல்லையா.

May be an image of text

ஏன் இறைவன் மனுவாய்ப் பிறந்தார்?

என்கிற கேள்விக்குப் பதிலென்ன?

வான் விடுத்து எவர்தான் வருவார்?

வையம் இறங்கிட ஏது என்ன?

நான் என்கிற தீவினை பெருத்து,

நானிலம் கெட்டு விழுந்ததினால்,

தான் பெற்ற மக்களை மீட்க,

தந்தையன்பாய் மகனளித்தார்!

(யோவான் 3:16)

May be an image of 2 people

புதிய ஏற்பாடு!

ஒவ்வொன்றிற்கும் ஒருவேளையுண்டு;

உரைப்படி வாக்கும் பிறந்தது.

எவ்விதமான பகட்டும் தவிர்த்து,

எளிமையின் ஆவி புரிந்தது.

கவ்விடும் நிந்தை கத்தியாயுண்டு;

கன்னியின் நெஞ்சோ திறந்தது.

இவ்விதமான திருமகன் பிறப்பு,

யாவற்றிலுமே சிறந்தது!

(லூக்கா 1)

No photo description available.

வருவார் என்கிற வாக்கின்படியே,

வையத்தாரிறை காத்திருந்தார்.

தருவார் அவரும் தகுந்த அரசே;

தாமதமாயினும் பார்த்திருந்தார்.

இருயிரு நூறு ஆண்டுகளாகியும்,

ஏனோ இறைவன் பேசவில்லை.

ஒருவரும் அறியா அந்த மௌனம்,

உடைக்குமறிவும் வீசவில்லை!

May be an image of text

மெசையா என்கிற மீட்பருளாளர்,

மேதினி ஆள வருவாரா?

அசையா அரசை அவரும் அமைத்து,

அன்புடன் நீதி தருவாரா?

இசைவாயெழுதிய இறைப்பேரரசை,

எந்நாட்டவரும் பெறுவாரா?

தசையாய் நாமும் உயிருள் இணைய,

தாமதியாயிறை வருவாரே!

-கெர்சோம் செல்லையா.

www.thetruthintamil.com

May be an image of text