யார் விளித்தாலும் இயேசு சென்று,
இறையிடம் திரும்ப அழைக்கிறார்.
தார் மணி மாலை தற்புகழ் என்று,
தம்பட்டமின்றி உழைக்கிறார்.
பேர் புகழ் பெருமை ஈட்ட இன்று,
பிழைப்போர் திருந்த அழைக்கிறார்.
போர் முகில் அன்று, பொறுமை நன்று;
புரிந்தோர் நன்கு உழைக்கிறார்!
(மத்தேயு 10 & 11).