தேனூறு வாக்குகள் தெய்வம் தந்தும்,
திருந்தாதிருந்தார் அந்நாட்டார்.
வானூறு மேகம் பொழிந்து ஈந்தும்,
வறண்டிருந்தார் இறை வீட்டார்.
நானூறு ஆண்டுகள் மௌனம் காத்தும்,
நல்லிறையோ கை விட மாட்டார்.
பானூறு பாடி, அவர் புகழ் சாத்தும்,
பாலைக் காட்டில் உரைத்திட்டார்!
(லூக்கா 3:2)
