விட்டிடு கொடுமை!
ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்;
ஒளித்திருந்து வெறியர் கொன்றார்.
யாரைக் காக்க இவரைக் கொன்றார்?
இல்லை நற்பதில், தராது சென்றார்.
போரைத் தவிர்ப்பீர், பேசிட வாரீர்.
புரிதல் பெற்று, இணையப் பாரீர்.
நீரை வடிக்கும் குடும்பமும் பாரீர்.
நினைந்து, திருந்தி, வாழ, வாரீர்!
-கெர்சோம் செல்லையா.