விழுந்துபோக வேண்டாம் நண்பா!

விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
“மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ‘என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ‘ நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ‘ என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ‘ இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ‘ என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.”

நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.

விழுந்துபோக வேண்டாம் நண்பா!
நற்செய்தி மாலை: மாற்கு 2:10-12.
"மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் 'என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, ' நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ ' என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், ' இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்."

நற்செய்தி மலர்:
எழும்பயியலா மனிதரைப் பார்த்து,
இயேசு எழும்பச் சொல்கின்றார்.
அழுது மடியும் கூட்டத்தாரோ  
அப்படி இயலா தென்கின்றார்.
தொழுது மகிழும் பற்றைப் பெற்று,
தூயரின்யரின் சொற்படி எழுபவர் யார்?
விழுந்துபோக வேண்டாம் நண்பா,
விண்ணின் வாக்கை நம்பிப் பார்!
ஆமென்.

எது பெரிது?

எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
“உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ‘ உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ‘ உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்பதா? ‘ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?”

நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும்
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும்
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்
வாழ்வே பெரிது, வா மனிதா!
ஆமென்.

எது பெரிது?
நற்செய்தி மாலை: மாற்கு 2: 8-9.
"உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, ' உங்கள் உள்ளங்களில் இவ்வாறு எண்ணுவது ஏன்?முடக்குவாதமுற்ற இவனிடம் ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா? ' எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட, என்பதா? எது எளிது?"

நற்செய்தி மலர்:
உள்ளில் உறையும் பிணியை விடவும் 
உடலில் காணும் நோய் பெரிதா?
எள்ளிச் சிரித்து இல்லை என்னும் 
இருக்கும் பாவந்தான் சிறிதா?
தள்ளிச் செல்லும் தன்மை கொல்லும்;
தன்னை அழித்தல் போதாதா?
வள்ளல் இயேசு வந்து வழங்கும்   
வாழ்வே பெரிது, வா மனிதா!  
ஆமென்.

வழக்கிலிருந்து விடுதலை தந்தார்!

வழக்கிலிருந்து  விடுதலை தந்தார்!

வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.
பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில்
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல்,
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக்
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும்,
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.
வழக்கிலிருந்து  விடுதலை தந்தார்!

வழக்கு, வாது, வம்புகள் என்று,
வருத்தம் கொடுத்தார் அன்னாட்டார்.
முழக்கும் வாக்கை நாவில் தந்து,
மும்மை இறையோ எனை மீட்டார்.
உழைக்கும் எண்ணம் இல்லார் இன்று,
ஊரில் இருளாய்க் கெடுக்கின்றார்.
கிழக்கில் தோன்றும் கதிரோன் போன்று,
கிறித்துவோ வெளிச்சம் கொடுக்கின்றார்!
ஆமென்.

பி.கு:
மைசூர் மாநில நடுவர் மன்றமொன்றில் 
என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றை 
வழக்குரைஞர் வைக்காமல் நடத்த 
ஆண்டவர் அருள் புரிந்தார்.
கை சூட்டி குற்றம் சாட்ட இயலாமல், 
வழக்கு தொடுத்தோர் ஓடும் காட்சியைக் 
காணச் செய்து, விடுதலையும் தந்தார்.
நடுவராய் விடுதலை தந்த தந்தைக்கும், 
வழக்குரைஞராய் பரிந்து பேசிய மைந்தனுக்கும்,
சான்று பகர்ந்த ஆவியருக்கும் நன்றி, நன்றி.
-கெர்சோம் செல்லையா.

 

நேர்மையை இன்னும் பெறுவோமே!

நேர்மையை இன்னும் பெறுவோமே!

நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
“அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ‘ இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ‘ என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.”
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.
நேர்மையை இன்னும் பெறுவோமே!
நற்செய்தி மாலை:மாற்கு 2:6-7.
"அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், ' இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்? ' என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்."
நற்செய்தி மலர்:
இறைமகன் வந்து இயம்பும்போது
இழிவாய் எண்ணிப் பழித்தாரே.
குறைகள் மிகுந்த ஊழியர் நம்மைக்
குற்றம் கூறிதான் பழிப்பாரே.
அறையும் ஆணியாய் அடித்துப் பேசல்
ஆவியர் வலிமை, அறிவோமே.
நிறையும் அருளை என்று வேண்டி,
நேர்மையை இன்னும் பெறுவோமே!
ஆமென்.

சுமந்து வந்தவர் பற்று!

சுமந்து வந்தவர் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 2:3-5.
“அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ‘ மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ‘ என்றார்.”

நற்செய்தி மலர்:
சுமந்து வந்தவர் பற்றினைக்கொண்டு
சுமையாய் வந்தவர் எழும்பியதுண்டு.
உமது பார்வையின் ஆழம் கொண்டு,
உயிர் வாழ்கின்றோம் உம்மைக் கண்டு.
எமது நடுவிலும் நோய்கள் கொண்டு,
எழும்ப இயலாதவர்கள் உண்டு.
அமர்ந்து கேட்கும் அடியவர் கண்டு,
அதிசயம் செய்யும் அன்பைக்கொண்டு!
ஆமென்.

சுமந்து வந்தவர் பற்று!
நற்செய்தி மாலை:மாற்கு 2:3-5.
"அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர்.  இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், ' மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார்."

நற்செய்தி மலர்:
சுமந்து வந்தவர் பற்றினைக்கொண்டு 
சுமையாய் வந்தவர் எழும்பியதுண்டு.
உமது பார்வையின் ஆழம் கொண்டு,
உயிர் வாழ்கின்றோம் உம்மைக் கண்டு.
எமது நடுவிலும் நோய்கள் கொண்டு,
எழும்ப இயலாதவர்கள் உண்டு.
அமர்ந்து கேட்கும் அடியவர் கண்டு, 
அதிசயம் செய்யும் அன்பைக்கொண்டு!
ஆமென்.
Like ·  · Share

புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள்!

இத்தனை ஆண்டுகள் எனக்கீந்தீர்;
இறைவா, உமக்கு என் செய்தேன்?
மொத்தமும் உம் அடி வைக்கின்றேன்;
மேய்ப்பனாய் என்னை நடத்திடுமே.
எத்தனை ஆண்டுகள் இனி அறியேன்;
எல்லாம் உம் அருள் என்றறிவேன்.
அத்தனே, உம் புகழ் பாடுவதே,
அடியனுக் கின்பம், கொடுத்திடுமே!
ஆமென்.

புத்தாண்டு வாழ்த்துகள்!<br />
இத்தனை ஆண்டுகள் எனெக்கீந்தீர்;<br />
இறைவா, உமக்கு என் செய்தேன்?<br />
மொத்தமும் உம் அடி வைக்கின்றேன்;<br />
மேய்ப்பனாய் என்னை நடத்திடுமே.<br />
எத்தனை ஆண்டுகள் இனி அறியேன்;<br />
எல்லாம் உம் அருள் என்றறிவேன்.<br />
அத்தனே, உம் புகழ் பாடுவதே,<br />
அடியனுக் கின்பம், கொடுத்திடுமே!<br />
ஆமென்.

வெளியே நிற்கின்றார்!

வெளியே நிற்கின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 2 :1-2.
“சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.”
நற்செய்தி மலர்:
எண்ணற்ற மக்கள் வெளியே நிற்கின்றார்;
இயேசுவைக் காண்பதற்கு ஏங்கித் தவிக்கின்றார்.
கண்ணற்று நாமும் கைலாகு கொடாதுவிடின்,
கடவுளின் அரசிற்கு வராது சென்றிடுவார்.
விண்ணற்று இவர்கள் விழுவது இறைவிருப்போ?
வேண்டாம் இத்தவறு, விழித்து எழுந்திடுவீர்.
பண்ணற்ற பாடல் பாடுதல் விட்டு விட்டு,
பாருங்கள் ஏழையரை, பாங்காய் உதவிடுவீர்!
ஆமென்.

நன்மை பெற்றவர்கள் உரைக்கட்டும்!

நன்மை பெற்றவர்கள் உரைக்கட்டும்!
நற்செய்தி மாலை: மாற்கு 1: 45.
“ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
நன்மை பெற்றவர்கள் நன்றியில் உரைக்கட்டும்;
நற்பணியாளர்களோ தம்மைத் தாழ்த்தட்டும்.
வன்மை விரும்பிகளும் வந்தே காணட்டும்;
வானவர் திருப்பணியை வாழ்த்திப் பாடட்டும்.

அன்றைய அருட்பணியை அகத்தில் நோக்கட்டும்;
ஆண்டவர் செய்ததுபோல் அடியரும் செய்யட்டும்.
இன்றைய தவறுகளை உணர்ந்தே திருத்தட்டும்;
இறைப்பணியாளர்களும் உண்மையில் திருந்தட்டும்!
ஆமென்.

விளம்பரம் செய்யாதீர்!

விளம்பரம் செய்யாதீர்!
நற்செய்தி மாலை : மாற்கு 1: 42-44.
“உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். பிறகு அவரிடம், ‘ இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும் ‘ என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.”
நற்செய்தி மலர்:
எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்;
இயேசுவின் ஊழியர் புகைப்படங்கள்.
இங்கு இதனால் அவப்பெயர்கள்;
எரிச்சல், போட்டி, பொறாமைகள்.
சங்கு முழக்கும் திருப்பணிக்குச்
சாவின் மணியடி தேவையில்லை.
பொங்கு தவற்றைப் புதைக்காது,
பொய்மை போற்றின், பயனில்லை!
ஆமென்.