ஆடு மேய்த்த தாவிதை அழைத்து,

அரசு தந்ததும் இறையருளே.

நாடு காத்திட சந்ததி தெரிந்து,

நடத்தி வந்ததும் இறையருளே.

வீடு பேறு வழங்கும் வழிக்கு,

விண் தேர்வதும் இறையருளே.

தேடு நண்பா, இறையைத் தேடு;

தெய்வ அறிவும் இறையருளே!

(2 சாமுவேல் 7).

May be an image of text