ஆயனாயிருந்து அரசனாய்ச் சிறந்தும்,

அவரிலும் தவறு இலாமலில்லை.

நேயனாய்த் திருப்பாடல்கள் வரைந்தும்,

நேர்மைக் குறை தொலையவில்லை.

சேயனாய்த் தாழ்ந்து, திருந்தும் வரைக்கும்,

செய்தவை விளையாதிருப்பதில்லை.

தூயனாய் மாற்றும் தெய்வ உரைக்கும்,

திருந்தார் வாழார், மறுப்பதில்லை!

(2 சாமுவேல் 11-12:25)

May be an illustration of 2 people