இருபது கடவா அகவை கொண்டும்,

இவரில் இருந்த இறைப் பற்று,

சிறுமை செய்வதை அழிக்கத் தூண்டும்,

செய்திச் சுரங்க அருள் ஊற்று.

அறுபது எழுபது என்றெனத் தாண்டும்,

அகவையுள்ளோர் இது கற்று,

வறுமை சிறுமை ஒழித்திட வேண்டும்,

வாழும் திரு மறைக் கூற்று!

(1 சாமுவேல் 16-18))

May be an image of 1 person