உழவர் மீனவர் உழைப்பவர் கேட்டால்,
ஒன்றும் கொடாதவர் இந்நாட்டார்.
கிழவர் சொல்லியா அடிமையை விடுவார்?
கேளா மனிதர் அந்நாட்டார்.
அழகிய கோபுரம் எழுப்பும் நாளில்,
அடிமையை யார் தான் விடுவிப்பார்?
தொழுதிடு நண்பா, தெய்வம் செய்வார்.
தொடரும் துயரில் கெடு வைப்பார்!
(விடுதலைப் பயணம் 5 & 6).