யாருக்கு புகழ்ச்சி?
இறை மொழி: யோவான் 17: 9-10.
9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே.
10. என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
இறை வழி:
பேருக்கு கிறித்தவர் என்று வாழும்
பெருமைக்குரிய நண்பர்களே,
யாருக்கு புகழ்ச்சி, யாருக்கு மாட்சி?
இறை முன் நின்று எண்ணுங்களே.
ஊருக்கு பெரியவர் என்று ஆளும்,
உங்கள் தற்புகழ் வாடிடுமே.
பாருக்கு நன்மை செய்பவர் இறைவன்;
பரன் அவர் பெருமை பாடிடுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.