முன்னுக்குப் பின்!
நம்முன் வந்து நம்மைப் புகழ்ந்து,
நல்லவன் என்று வாழ்த்துகிறார்.
தம்மிரு கால்கள் திரும்பும் போது,
தவறாய் ஏசித் தாழ்த்துகிறார்.
இம்மாதிரியார் இருப்பது கண்டு,
ஏன் நெஞ்சே நீ கலங்குகிறாய்?
சும்மா என்று தூக்கியே போடு;
சுட்ட வாக்கால் துலங்கிடுவாய்!
-கெர்சோம் செல்லையா.