இறை நிந்தை!
வாக்கு: யோவான் 10: 31-33.
- 31. அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
- 32. இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.
- 33. யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.
வாழ்வு:
சொல்லால் வெல்ல இயலாதாரே,
சுமத்திச் செல்வார் வீண்பழி.
கல்லால் அடிக்கவும் துணிகிறாரே,
காணுமோ, நம் கண் விழி?
நல்லார் தெரிந்தும் நடக்கிறாரே;
நன்மை மட்டும், அவர் மொழி.
எல்லாத் தீங்கும் அழித்தொழிக்கும்,
இறைவழியே நல் வழி!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.